img
img

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு
புதன் 31 மே 2017 17:56:42

img

காபூல், இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அண்டை நாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பாதுகாப்பு அதிகம் உள்ள பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு இந்திய தூதரகத்தின் அருகில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப் பில், இந்திய தூதரக கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் தூதரகத்திற்குள் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இத்தாக்குதல் நடைபெற்றுள்ள பகுதியில் தான் ஜனாதிபதி மாளிகை மற்றும் வெளிநாட்டு தூதர்களின் வீடுகளும், உள்ளன. இதனால் அங்கிருந்த வீடு களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் நொறுங்கி சேதம் அடைந்தன. இந்த கோர தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், தற்போதைய நிலைப்படி பலி யானவர்களின் என்ணிக்கை 80 ஆக அதிகரித்திருக்கலாம் என அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். குண்டு வெடித்த பகுதி முழுவதும் ரோடுகள் மூடப்பட்டன. ஏராளமான கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் மீட் கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இத்தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img