img
img

வௌ்ளத்திலிரிந்து மக்களைக் காப்பற்ற இந்திய இரு கப்பல்கள் இலங்கை சென்றன
சனி 27 மே 2017 14:57:11

img

இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வகையில் நிவாரணப் பொருட்களுடன் இரண்டு கடற்படைக் கப்பல்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 230 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாக தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்தியா உடனடியாக உதவ முன்வந்தது. இந்தியக் கடற்படையின் கப்பல் ஒன்று உதவிப் பொருட்களுடன் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும் மற்றொரு கப்பல், நாளை மறுநாள் கொழும்பு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img