காபுல்: தீவிரவாத அச்சுறுத்தல் தலைவிரித்து ஆடும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ரமலான் நோன்பு மாதம் பிறந்த முதல் நாளான இன்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலுக்கு 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தின் அருகே இன்று நடந்த இந்த தாக்குதலில் 18 பேர் உடல் சிதறி பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் வடமேற்குப்பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணம் காடிஸ் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும், இடையே இன்று நடை பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 22 தீவிரவாதிகள், 6 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 8 பேர் பலியாகினர். இரு தரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்