img
img

இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடக்கும் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை
புதன் 24 மே 2017 17:31:41

img

லண்டன் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து இங்கிலாந்தின் முக்கிய இடங்களில் 5000-க்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மான்செஸ்டர் நடத்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அமைப்பு நகரில் பிற இடங்களில் குண்டு வெடிக்கும் என எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் தெரசா மே நாடு முழுவதும் உஷார் நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். லண்டன் மான்செஸ்டர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனிடையே ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாதுகாப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யக்கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. கடிதம் எழுதியுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img