img
img

யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள் வெட்டு!
திங்கள் 01 மே 2017 17:40:59

img

யாழ்ப்பாணம், கொக்குவில் பிடாரி கோவில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலையடுத்து, வீதியில் சென்றவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள் ளனர். இந்த சம்பவத்தையடுத்து குறித்தப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இரு இளைஞர்களுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்ற தகராறு பின்னர் மோதலாக மாறியுள்ளது. இதன் போது அருகில் இருந்த இளைஞர்கள் குறித்த இரு வரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். எனினும், கேணியடியை சேர்ந்த இளைஞர் ஒன்பது பேர் கொண்ட குழுவுடன் வந்து, தன்னோடு தகராற் றில் ஈடுபட்டவரை தாக்குவதற்கு தேடியுள்ளார். இந்நிலையில், வீதியில் சென்றவர்கள் மீதும் குறித்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது தாக்குதலுக்கு இலக்கான வான் சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img