img
img

சென்னையில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கை பெண் பலி
திங்கள் 01 மே 2017 17:31:03

img

சென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பெண் பயணித்த கெப் ரக வாகம் ஒன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் மேற்கொண்ட இலங்கை பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். விபத்தில் கார் சாரதி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் ராஜிவ் காந்தி மருத்தவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். தி-நகருக்கு சென்று திரும்பி வந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்துள்ளதுடன் தடுப்பு சுவர்களை உடைத்துக்கொண்டு கார் 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர். இந்த விபத்தில் 54 வயதான சித்தி ரித்வியா என்பவரே உயிரிழந்துள்ளார். அத்துடன், 34 வயதான மொஹமட் ஆசாத் ரபாட், மொஹமட் அஜ்மல் மற்றும் ஜிமா நஸாட் அம்ஜல் ஆகியோர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.மேலும், இவர்கள் மே 3 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img