img
img

மோதிய ஆளில்லா விமானம் லண்டனில் பரபரப்பு
செவ்வாய் 19 ஏப்ரல் 2016 14:05:14

img

லண்டன்,ஏப்.19- இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மீது ஆளில்லா விமானம் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் உயர்பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானங்களை பறக்கவிட வேண்டாம் என லண்டன் நகர போலீசார் ஏற்கெனவே எச்சரித்துள்ள நிலையில் நேற்று நிகழந்த இந்த மோதல் விமான நிலைய அதிகாரிகளை பரபரப்படைய வைத்துள்ளது. ஜெனிவா நகரில் இருந்து வந்த அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நண்பகல் 12.50 மணியளவில் லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது, அந்த விமானத்தின் முன் பகுதி மீது ஒரு சிறியரக ஆளில்லா விமானம் மோதியதாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக, இந்த மோதலால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 132 பயணிகள், விமானிகள் உள்ளிட்ட ஐந்து பணியாளர்களுடன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
நாட்டில் வேலை செய்ய வங்காளதேச தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி!

அமைச்சர் எம்.குலசேகரன்

மேலும்
img
இம்மாதம் 20ஆம் தேதி பி.எஸ்.எச். உதவித் தொகை!

பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்

மேலும்
img
குளு, குளு கேமரன் மலையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்

மேலும்
img
30 ஆண்டு காலமாக நாட்டின் முதல் எதிரியாக போதைப்பொருள்

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img