img
img

உலக மக்களை காப்பாற்ற வட கொரியா அதிபரை கொல்ல வேண்டும்
செவ்வாய் 04 ஏப்ரல் 2017 17:38:24

img

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது வட கொரியா அணுகுண்டுகளை வீசுவதற்கு முன்னர் அந்நாட்டு அதிபரை கொல்ல வேண்டும் என வட கொரியாவில் இருந்து தப்பி வந்த உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணு ஆயுதங்களை தயாரிப்பதும், அவற்றை சோதனை செய்வதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், வட கொரியாவில் இருந்து தப்பிய அரசு உயர் அதிகாரியான Thae Yong Ho என்பவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், அணு ஆயுதங்களை பயன்படுத்த வட கொரியா அதிபரான கிம் யோங்-அன் தயாராக உள்ளார்.உலகம் எதிர்ப்பார்க்கும் வகையில் கிம் யோங் அன் ஒரு சாதாரண நபர் இல்லை. கற்பனைக்கு எட்டாத கொடூரமான ரகசிய திட்டங்களை வைத்துள்ளார். தனக்கு அல்லது தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக சிறிய அறிகுறிகள் தெரிந்தாலும் கூட அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது அணுகுண்டுகளை வீடி பேரழிவை ஏற்படுத்துவார்.வட கொரியாவின் ராணுவம் தற்போது மிகவும் பலமானதாக முன்னேறியுள்ளது. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயாராகலாம். உலக மக்களை பேரழிவில் இருந்து காப்பாற்றுவதற்கு வட கொரியா அதிபரை உடனடியாக கொல்ல வேண்டும் எனவும், இதற்கு உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் Thae Yong Ho எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img