img
img

இலங்கையில் மீண்டும் விடுதலைப் போராட்டம்!
வியாழன் 30 மார்ச் 2017 13:46:18

img

இலங்கையில் மீண்டும் விடுதலைப் போராட்டமொன்றை மேற்கொள்வது தொடர்பில் தமிழ்நாட்டின் மே-17 இயக்கம் ஆலோசனையொன்றை நடத்தி யுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் வருடாந்த அமர்வில் இலங்கை தொடர்பில் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். குறித்த அமர்வில் கலந்துகொண்டிருந்த இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து உரையாடிய அவர், மீண்டும் போராட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனைகளும் வழங்கியுள்ளார். தமிழ் மக்கள், தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாயின் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தேர்தல்முறை தொடர்பில் எந்தவொரு நம்பிக்கையும் வைக்கமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img