img
img

இப்ப பேசும் பொன்னையா இத்தனை நாள் என்னய்யா செய்தீர்?
சனி 04 மார்ச் 2017 14:01:27

img

ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணம் அடைந்தது வரை வாய் திறக்காத பொன்னையன் தற்போது பொங்கி எழுந்தது ஏன் என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா உடல்நிலைக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாள்கள் சிகிச்சைப் பின்னர் அவர் மரணமடைந்தார். இந்நிலையில் ஆட்சி, அதிகாரப் போட்டி, உள் கட்சி பூசல் காரணமாக அதிமுக மூன்றாக கூறுபோடப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணை அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் மனு கொடுத்தனர். ஜெயலலிதா மரணம், நீதி விசாரணை குறித்து பதவியில் இருந்த முதல்வர் பன்னீர் செல்வம் பதவி பறிபோனதைத் தொடர்ந்து இப்போது கேள்வி எழுப்புவது ஏன் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிய வருகின்றனர். சென்னை திநகரில் லட்சிய திமுக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜிநாமா செய்த வரை இருந்த 175 நாள்களில் ஜெயலலிதா குறித்து அவர் வாய் திறக்காதது ஏன்? இந்நிலையில் சின்னம்மா அவர்கள்தான் கட்சிப்பதவியையும், ஆட்சியையும் கவனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பொன்னையன் இத்தனை நாள்கள், சசிகலாவுக்கு எதிரான கருத்துகளையும், ஜெயலலிதா மரணம் குறித்து மர்மத்தையும் பேசுவது ஏன்? இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்? அந்த 137 நாள்கள் நடந்தது என்ன? என்ன? என்ன?.... என்று எண்ண, எண்ண, எண்ண,... நெஞ்சு கொதிக்கிறது என்றார் அவர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img