img
img

மாற்றுத்திறனாளிகளை புண்படுத்திய பேச்சு!
சனி 04 மார்ச் 2017 13:41:38

img

நடிகர் ராதாரவி மாற்றுத் திறனாளி குழந்தைகள் மனம் புண்படும்படி மேடையில் பேசியதைக் கண்டித்து அவரது வீட்டை, மாற்றுத்திறனாளிகள் முற்றுகை யிட்டுள்ளனர். நடிகர் ராதாரவி அதிமுகவின் பேச்சாளராக இருந்தார். அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசுவதில் புகழ் பெற்றவர். அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் மதிமுக தலைவர் வைகோ ஆகியோரை மாற்றுத்திறனாளி குழந்தைகள் என்பது போல் நடித்துக் காண்பித்துப் பேசினார். அப்போது மேடையில் இருந்தவர்கள் அதனை ரசித்துக் கைதட்டினர். தற்போது அவருடைய இந்த மனிதம் இல்லாத பேச்சு பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. கனிமொழி தன் முகநூல் பக்க்த்தில் இதனைக் கண் டித்து எழுதியிருந்தார். இந்நிலையில், அவரது பேச்சால் மனம் புண்பட்ட மாற்றுத் திறனாளிகள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தை கைவிட வேண்டும் என போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். நடிகர் ராதாரவி தற்போது திமுக வில் இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img