img
img

ஜெ.வுக்கு தளபதியாக இருந்தேன்.. எதிரிகள் அஞ்சுகிறார்கள்..
திங்கள் 13 பிப்ரவரி 2017 13:24:17

img

ஜெயலலிதாவுக்கு தளபதியாக இருந்தவர் என மற்றவர்கள் தன்னைக்கண்டு அஞ்சுவதாக சசிகலா தெரிவித் துள்ளார். தன்னை எவராலும் அசைக்க முடியாது என்றும் சசிகலா கூறியுள்ளார். கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா நேற்று இரண்டாவது நாளாக சந்தித்தார். அப்போது அவர்களிடம் சசிகலா பேசினார்.கட்சியை அழிக்க நினைத்தவர்கள் அதிமுக பொதுச் செயலாளராக தான் பதவியேற்றப் பிறகு தன்னைப் பற்றி விசாரித்ததாக சசிகலா தெரிவித்தார். தான் எப்படி, தன்னுடைய குணாதசியங்கள் என்ன, தான் எதற்கு படிவேன் என்பது குறித்தெல்லாம் விசாரித்தாக கூறினார். விசாரித்தவர்களிடம் ஜெயலலிதாவுக்கு பின்னிருந்து தான் தளபதியாக செயல்பட்டதை அறிந்துள்ளனர். கட்சி கஷ்டத்தை சந்தித்தபோதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தோள் கொடுத்து தூக்கியவர் சசிகலா என தெரிந்து விசாரித்தவர்கள் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அஞ்சி ஓடுவதாக சசிகலா தெரிவித்தார். தன்னை எவராலும் அசைக்க முடியாது என்று கூறிய அவர், தான் எந்த வலையிலும் சிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு தளபதியாக இருந்தவர் என மற்றவர்கள் தன்னைக்கண்டு அஞ்சுவதாக சசிகலா தெரிவித் துள்ளார். தன்னை எவராலும் அசைக்க முடியாது என்றும் சசிகலா கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img