img
img

1000க்கும் மேற்பட்ட வீரர்கள்.. 500க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு
ஞாயிறு 05 பிப்ரவரி 2017 10:35:46

img

அவனியாபுரத்ததில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு அங்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டம் இயற்றியது. இதையடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடை தகர்க்கப்பட்டதையடுத்து அலங்காநல்லூர் அவனியாபுரம், பாலமேடு ஆகியப் பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த நாள் குறிக்கப்பட்டது. 5ஆம் தேதியான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரலாறு காணாத பாதுகாப்பு இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான காளைகளை ஏறுதழுவ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முன்னிட்டு அப்பகுதியில் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப்போட்டிகளை முன்னிட்டு அவனியாபுரம் பகுதியில் 500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காயமடையும் மாடுபிடி வீரர்கள் மற்றும காளைகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. வீரர்களுக்காக 8 ஆம்புலன்சுகளும் காளைகளுக்காக 2 ஆம்புலன்ஸ்களும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் வாடிவாசல் அருகே பொதுமக்கள் பாதுகாப்புக்காக தட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கண்டுகளித்து வருகின்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img