img
img

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் சீமான் தொடர் போராட்டம்
வியாழன் 19 ஜனவரி 2017 09:52:57

img

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. மதுரையில் நேற்று நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை முழங்கினார்கள். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசி, போராட்டக்காரர்களுக்கு ஆதரவை தெரிவித்தார். அப்போது அவரை நோக்கி தண்ணீர் பாக்கெட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து, சீமான் தனியாக இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர் போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியினருக்கு இன்று காலை, அப்பகுதி பொதுமக்கள் டீ, வடை வழங்கினார்கள். போராட்டம் குறித்து சீமான் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்காக நாளை (20-ந் தேதி) வரை மதுரையில் தங்கி இருந்து போராடுவேன். மத்திய-மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 21-ந் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவேன் என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img