img
img

அரசியல் ஆதாயத்துக்காக சொந்த மனைவியையே கைவிட்டார் மோடி: மாயாவதி கடும் தாக்கு
திங்கள் 13 மே 2019 15:51:14

img
அரசியல் ஆதாயத்துக்காக சொந்த மனைவியையே கைவிட்டார் மோடி என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கடுமையாக சாடினார்.
 
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பெண் ஒருவர் தன்னுடைய கணவர் கண்ணெதிரே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டது. இந்த சம்பவம் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்றது. இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து  சமூக வலை தளங்களிலும் அவர்கள் அதனை பதிவிட்டனர்.
 
இந்த சம்பவம் குறித்து ஏப்ரல் 30ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், உடனடியாக வழக்குப் பதிவு செய்ய ப்படவில்லை. மே 7ம் தேதிதான் வழக்குப் பதிவு செய்தனர். ஏப்ரல் 29 மற்றும் மே 6ம் தேதி தேர்தல் நடைபெற்றதால் வழக்குப் பதிவு செய்யப்ப டவில்லை என கூறப்படுகிறது
 
இதற்கு மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அண்மையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில் இதை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது அவர்,''தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடு மைக்கு  உள்ளாக்கப்பட்டுள்ளார். அம்மாநில காவல்துறையும் மாநில அரசும் இந்த தவறை தடுக்க தவறி விட்டது. மற்ற பல மாநிலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தபோது ஆவேசமாக பேசியவர்கள் இப்போது ஏன் அமைதியாகி விட்டார்கள். அவர்கள் பின்னணி என்ன?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார். 
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்  மாயாவதி, ''அல்வார் கூட்டு பலாத்கார வழக்கில், இத்தனை நாட்க ளாக மோடி அமைதியாக இருந்தார். இப்போது தேர்தல் வந்ததும் அதைப் பற்றி பேசுகிறார். இதன்மூலம் அவர் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார். இதன்மூலம் தேர்தலில் அவரின் கட்சிக்கு நன்மைகள் கிடைக்கும். இது மிகவும் அவமானகரமானது. அரசியல் ஆதாயங்களுக்காக அவரின் சொந்த மனைவியையே கைவிட்டவர். மற்றவர்களின் சகோதரிகளையும், மனைவிகளையும் எப்படி மதிப்பார்” என்று கடுமையாக சாடினார். 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img