img
img

பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பிரச்சாரம்..பயந்தோடும் கூட்டணி கட்சிகள்
சனி 13 ஏப்ரல் 2019 14:18:52

img

சென்னை:

பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாள்தான் இருக்கு.. ஆனால் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவாராம்.. அதை 2 நாளில் நமக்கு சொல்வாராம் பிரேமலதா!விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லைன்னு நமக்கு தெரியும். அதனாலதான் 4 வருஷமா ஒதுங்கியே இருக்கார். பிரேமலதாவுக்கு பொருளாளர் பதவி உட்பட கட்சியின் பொறுப்புகளிலும் நிறைய மாற்றம் கேப்டன் கொண்டு வந்தார்.

கூட்டணி சம்பந்தமான விஷயம் வரும்போதும், பிரேமலதாவும், சுதீஷூம்தான் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார்கள். நேர்காணலின்போதும் விஜயகாந்த், தன் ஒற்றை விரலால் தொண்டையை காரணம் காட்டி பேச முடியாது என்று சைகையால் சொல்லிவிட்டார்.

அமெரிக்காவில் இருந்து ஊருக்கு வந்ததில் இருந்து இதுவரை மக்களிடம் விஜயகாந்த் பேசவே இல்லை. தன் கட்சி தொண்டர்களிடம் கூட தேர்தல் சம்ப ந்தமாக உற்சாகம் தரும்படி எதுவுமே சொல்லவில்லை. இப்போதைக்கு விஜயகாந்த்தால் பிரச்சாரம் செய்ய முடியாது என்று டாக்டர்களும் சொல்லி விட்டார்கள். அதற்கேற்றபடிதான் இத்தனை நாளாக பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர்.

அந்த கட்சி சார்பில் போட்டியிடும் சுதீஷ் என்ன பேசுகிறார் என்றே வெளியில் தகவல் வரவில்லை. விஜய பிரபாகரனோ சமீப காலமாகத்தான் பிரச்சாரம் செய்து வருகிறார். அதுகூட எப்போது என்ன வார்த்தையை பேசிவிடுவாரோ என்று நமக்கு ஒரு பக்கம் அள்ளு கிளம்புகிறது. கட்சியின் பிரச்சார பீரங்கி யான பிரேமலதாவோ தினமும் எதையாவது ஒன்றை பேசி பல்பு வாங்கி வருகிறார். சில சமயம் பிரச்சார வேனை விட்டு கூட கீழே இறங்குவதில்லை.

இவ்வளவும் தன் பக்கம் வைத்து கொண்டு, விஜயகாந்த் பிரச்சாரம் செய்வாரா, மாட்டாரா என்பது குறித்து இன்னும் 2 நாளில் தெரிவிப்பேன் என்று பிரே மலதா சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது சொல்லிவிட்டு போகிறார். ஆனால் "வருவார், வந்து கொண்டிருக்கிறார், வந்து விடுவார்" என்று கூறி மக்களை ஏமாற்றப் பார்த்தால் அது தேமுதிகவுக்கே எதிராக போகும். பிரேமலதா எப்போதான் மக்களை சரியாக புரிந்து கொள்வாரோ!

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img