img
img

300 தீவிரவாதிகள் இறந்ததாக நாங்களா கூறினோம்; மத்திய அமைச்சரின் சர்ச்சை வீடியோ...
திங்கள் 04 மார்ச் 2019 13:24:53

img

புல்வாமா தாக்குதலுக்கும் பதில் தாக்குதலாக இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளி யாகின.

ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசியிருந்த அவர், "எதிரிகளின் பகுதிகளை ஊடுருவித் தாக்கமுடியும் என்பதை தெரியப்படுத்துவதுதான் நோக்கமே தவிர தாக்குதலில் மனித உயிர் இழப்புகளை ஏற்படுத்துவது அல்ல.

இந்தியா மற்றும் சர்வதேச ஊடகங்களும் மோடி கூறியதாக சில தகவல்களை வெளியிட்டன. ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றி பிரதமர் எதுவும் சொல்லவில்லை. நான் கேட்கிறேன், பிரதமர் மோடியோ, அரசாங்க செய்தித் தொடர்பாளரோ அல்லது எங்கள் கட்சித் தலைவர் அமித் ஷாவோ பாலாகோட் தாக்குதலில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று எப்போதாவது சொன்னார்களா? எந்த ஒரு உயிரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்க த்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை" என கூறினார். அவர் இப்படி பேசிய அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img