img
img

அதிமுக எம்.பி. குமார் மீது திமுகவினர் தாக்குதல்
சனி 23 பிப்ரவரி 2019 18:25:44

img

திருச்சி பொன்மலையில் பேருந்து நிலையம் கட்டுவது தொடர்பாக அதிமுக - திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில்  எம்.பி.குமார் தாக்கப்பட்டார். 

பொன்மலையில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் எம்.பி. குமார் தனது தொகுதி  நிதியில் இருந்து 7 லட்சம் ஒதுக்கி பேருந்து நிலையம் கட்ட அனுமதி பெற்றிருந்தார். இதற்காக பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்கியது.

ரயில்வே துறையில் இதற்குரிய அனுமதி பெறாமல் இடிக்கப்படுவதாக கருதி,  திமுகவினர் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தந்துள்ளனர். உடனடி யாக அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். இதனால் அதிமுக-திமுகவினர் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.

ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.  கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.  இந்த தாக்குதலில் குமார் எம்.பி. கடுமையாக தாக்கப்பட்டார்.   திமுக வட்ட அலுவலகம் மீதும் தாக்குதல் நடந்தது.  இந்த பதற்றத்தை அடுத்து அங்கு மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அங்கு விரைந்து வந்து எச்சரித்தும் இருதரப்பினரும் மோதிக்கொண்டதால் போலீசார் அடிதடியில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.  இந்த சம்பவத்தால் திருச்சியில் பதற்றம் நிலவுகிறது.   

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img