img
img

காமராஜர் ஆட்சியை கொடுப்போம்.. திருப்பூரை திரும்பி பார்க்க வைத்த மோடி!
திங்கள் 11 பிப்ரவரி 2019 13:21:03

img

திருப்பூர்:

என்னுடைய பாஜக அரசு காமராஜர் கனவு கண்ட ஆட்சியை இந்தியாவில் வழங்கும் என்று பிரதமர் மோடி திருப்பூரில் பேசி இருக்கிறார்.இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். திருப்பூரில் நடந்த பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்க விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.அதன்பின் திருப்பூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். இதில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு பல வாக்குறுதிகளை அவர் முன்வைத்தார்.

நம் நாட்டின் முன்னேற்றத்தை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது.இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வரி செலுத்திக் கொண்டு இருக்கி றார்கள். அதனால்தான் நாட்டின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.பல நாள் கோரிக்கையான வருமான வரிவிலக்கு கோரிக்கை மக்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது

ரூ 5 லட்சம் வருட வருமானம் இருந்தால் யாருக்கும் வருமான வரி கிடையாது.மக்கள் காங்கிரஸ் கட்சியினரை புறக்கணித்தார்கள். காங்கிரஸ் கட்சி யினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவார்கள்.காங்கிரஸ் தன்னை ஆளப்பிறந்த கட்சியாக நினைத்துக் கொண்டு இருந்தது .

தற்போது காங்கிரஸ் ஆளும் காலம் முடிந்துவிட்டது. காங்கிரஸிடம் என்ன கேட்டாலும் அவர்களிடம் மோடி என்ற வார்த்தைதான் இருக்கும்.விவசாயம் குறித்து கேட்டால் மோடி என்பார்கள்.தொழிற்சாலை குறித்து கேட்டால் மோடி என்பார்கள். மோடியை வசைபாடுவதே அவர்களின் அரசியல் இருக்கிறது. காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும்.

நீங்கள் டெல்லியில் ஒரு ஆட்சியை அமர்த்தி உள்ளீர்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை.இது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பி னார். முன்பு ஒரு குடும்பம்தான் ஆட்சி நடத்தி வந்தது.தற்போது மக்கள் ஆட்சி நடந்து வருகிறது. மோடி ஒன்றும் செய்யவில்லை என்று அவர்கள் கூறுகி றார்கள், ஆனால் அனைத்தையும் செய்தது நாங்கள்தான், என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img