img
img

விடுதலைப் புலிகளை ஆதரித்த வழக்கிலிருந்து வைகோ விடுதலை
வெள்ளி 21 அக்டோபர் 2016 13:41:23

img

பொது கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஈழத்தில் என்ன நடக்கிறது? என்பது குறித்த பொது கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்து வைகோ மற்றும் ம.தி.மு.க கட்சியின் முன்னாள் நிர்வாகி கண்ணப்பன் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. மேலும், குறித்த இருவரும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டு கியூ பிரிவு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் வைகோ மீது மாத்திரம் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கு விசாரணைகள் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.சுமார் 8 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் இறுதி விசாரணைகள் முடிந்த நிலையில், நேற்று வழக்கின் தீர்ப்பு மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வழங்கியிருந்தார். சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம், தேசதுரோக சட்டப் பிரிவு ஆகியவற்றில் குற்றச்சாட்டுகள் முழுமையாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டவில்லை.எனவே, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்ட பட்டவருக்கு வழங்கி, இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img