img
img

கரெண்ட் இல்லாத எங்க ஊர்ல ஒரு நாள் தங்குங்க... ஓ.பன்னீர்செல்வத்தை சுற்றி வளைத்த பொதுமக்கள்
சனி 24 நவம்பர் 2018 13:41:42

img

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கந்தவர்கோட்டையில் மக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். 

கந்தவர்கோட்டை கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இருந்த நேரத்தில், அந்த வழியில் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். புயல் அடித்து இத்தனை நாள் ஆகிறது ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினர். குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றார். 

அப்போது பொதுமக்கள் விஜயபாஸ்கரை சரமாரியாக கேள்வி கேட்டனர். துணை முதலமைச்சரிடம் குறை சொல்வதை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள். நீங்களும் செய்ய மாட்டீர்கள். அவரிடம் சொல்லவும் விடமாட்டீர்கள். யாரிடம் குறைகளை சொல்வது, குடிக்க தண்ணீர் இல்லாமல், பால் இல்லாமல் கஷ்டப்படுவது எங்க வீட்டு பிள்ளைகள் என பொதுமக்கள் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதம் செய்தனர். 

கரெண்ட் இல்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் சார், கரெண்ட் இல்லாத எங்க ஊர்ல ஒரு நாள் தங்குங்க. உங்களால முடியுமா? எங்க கஷ்டத்தை நினைச்சி பாருங்க சார் என ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அந்த இடத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோர் சென்றனர்

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img