img
img

இதய அறுவை சிகச்சைக்காக சேர்த்த பணத்தை கேரளாவிற்கு கொடுத்த தமிழக ஏழை சிறுமி!!
வெள்ளி 24 ஆகஸ்ட் 2018 13:47:05

img

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000 கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு கேரளாவின் நிலை மாறியது.

இந்த வெள்ள சேத பாதிப்புகளை டிவியில் பார்த்த கரூர் குமாரபாளையம் தான்தோனிமலை கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி அக்ஷ்யா தன் இதய அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த  20 ஆயிரம்   பணத்தில் 5 ஆயிரம் ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்க முன்வந்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமியின் தாய் ஜோதிமணி  கூறுகையில்,

ஆறு வருடத்திற்கு முன் அக்ஷுயாவின் அப்பா இறந்துவிட்டார். அக்ஷ்யா அவளது சகோதரிகள் நான் உட்பட அனைவரும் எனது அம்மா வீட்டில்தான் இருந்து வருகிறோம். அக்ஷ்யா பிறக்கும்பொழுதே இதய குறைபாட்டோடு பிறந்தாள் அவளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தால் அவள் உயிர் வாழ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் கடந்த 2017-ஆம் நவம்பர் மாதம் முதல் இதய அறுவை சிகிச்சை முடிந்தது.

அந்த அறுவை சிகிச்சைக்கான தொகையை முகபுத்தக்கம் மற்றும் நண்பர்கள் மூலம் கிடைத்த 3.5 லட்சத்தை வைத்து செய்து முடித்தோம். அதேபோல் இரண்டாம்கட்ட அறுவை சிகிச்சை வரும் நவம்பர் மாதம் செய்ய இருக்கிறோம் ஆனால் அக்ஷ்யா கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கை டிவியில் பார்த்துவிட்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ஆசைப்பட்டாள் சேர்த்துவைத்த தொகையில் இருந்து எங்களால் முடிந்த இந்த தொகையை அளித்துள்ளோம் என கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img