img
img

ஏமாற்றாதே...ஏமாறாதே...என திமுக எம்.எல்.ஏவை நோக்கி பாடும் உடன்பிறப்புகள்!!
சனி 07 ஜூலை 2018 15:56:40

img

வேலூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்று மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை நியமித்து நிர்வாகம் செய்கிறது திமுக தலைமை. அதில் மத்திய மாவட்ட செயலாளரக இருப்பவர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்ற இரண்டு மாவட்டங்களில் அதிகளவு கோஷ்டி பிரச்சனை உள்ள மாவட்ட மாக இருப்பது இந்த மத்திய மாவட்டம்தான். தற்போது அந்த மாவட்ட செயலாளர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி ஏமாற்றாதே.. ஏமாறாதே.. என பாட்டுப்பாடி வருகின்றனர்.

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு மலை கிராமங்களை சேர்ந்த பழங்குடி மக்களின் பெண் பிள்ளைகள், படிக்க வசதியில்லாமல் தொடக்க கல்வியையே பாதியில் விட்டுவிட்டனர். அப்படிப்பட்ட பிள்ளைகளை அதிகாரிகள் அழைத்துவந்து அணைக்கட்டுவில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்த்துள்ளனர். இங்கு 55 பெண் பிள்ளைகள் பயின்றுவருகின்றனர்.

இவர்களை கடந்த ஜீலை 6ந்தேதி சென்னைக்கு தனது சொந்த செலவில் அழைத்து வந்த எம்.எல்.ஏநந்தகுமார், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதியை சுற்றிக்காட்டினார். அதோடு பிர்லா கோளரங்கத்துக்கும் அனுப்பி அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார். அங்கு சில செய்தி யாளர்களை சந்தித்த நந்தகுமார், இந்த மாணவிகள் தார்சாலையே பார்த்திராதவர்கள். தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மலைவாழ் மக்க ளுக்கு உதவி செய்ய சென்றபோது, மெரினா கடற்கரையை பார்க்க வேண்டும்மென்றதால், குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன் எனக்கூறி யுள்ளார்.

இதை பார்த்துவிட்டுதான் ஏமாற்றாதே..ஏமாறாதே.. என பாட்டுப்பாடிக்கொண்டுள்ளார்கள் வேலூர் மத்திய மாவட்ட திமுகவினர் பலர். அவர்களிடம் விசாரித்தபோது, பிள்ளைகளை சுற்றுலா அழைத்து சென்று சுத்திக்காட்டியது நல்ல விஷயம்தான். இதையெல்லாம் தலைவர் கலைஞர் பிறந்தநாளுக்காக செய்தேன் என சொல்லி மக்களை ஏமாற்றுவதைத்தான் பொருத்துகொள்ள  முடியலைங்க என்றார்கள்.

என்னவென்று கேட்டபோது, ஜீன் 27ந்தேதி நந்தகுமார் பிறந்தநாள். இதற்காக கோயிலில் பூஜைகள், தங்கத்தேர் இழுப்பு, அன்னதானம் என அவரது ஆதர வாளர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அசத்தி கொண்டாடினார்கள். அப்படியொரு நிகழ்ச்சிக்காக தான் அணைக்கட்டு உண்டு உறைவிடப்பள்ளிக்கு சென்று அங்குள்ள பெண் குழந்தைகளுக்கு இலவசமாக ஆடைகளை வழங்கினார். இந்த ஆடைகளை தனது நண்பர்கள் லண்டன் பைசல், சண்மு கசுந்தரபாபு, துபாய் குமரன், சந்தோஷ் சேர்ந்து உங்களுக்கு இந்த ஆடைகளை வாங்கித்தருகிறார்கள் என்றவர். நான் உங்களை பீச்க்கு அழைத்து செல்கிறேன் என்றார். 

அனைத்தும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு செய்தார், பேசவும் செய்தார். அதுக்கான வீடியோ பதிவுயிருக்கு. ஆனால் முரசொலி பத்திரிக்கை யில் என்னன்னு செய்திவருது, நான் தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு உடைகள் வழங்கினேன் என்று செய்தி வந்தது. இப்போ பிள்ளைகளை சுற்றுலா அழைத்து சென்றவர் தலைவருக்காக செய்தேன், தளபதிக்காக செய்தேன் என்று சொல்கிறார். பிள்ளைங்களுக்கு துணி தருவது, சுற்றுலா கூட்டிச்செல்வது நல்ல விஷயம்தான், ஆனால் ஏன் தலைவருக்காக செய்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றனும் எனக்கேட்கிறார்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img