img
img

கவர்னருக்கு அடிமையான எடப்பாடி ஆட்சி: ஸ்டாலின் கண்டனம்
புதன் 27 ஜூன் 2018 12:12:58

img

கவர்னருக்கு அடிமையாக, மத்திய அரசுக்கு அடிமையாக, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் எடப்பாடி பழனிசாமி தலை மையிலான ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

நேற்றைய தினம் கவர்னர் மாளிகையில இருந்து ஒரு செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆங்கில பத்திரிக்கை தி இந்துவில் அந்த செய்தி வந்திருக்கிறது. அதில், முதல் அமைச்சருக்கே தெரியாமல், அரசுக்கே தெரியாமல் கவர்னர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலாளராக இருக்கக்கூடிய கிரிஜா வைத்தியநாதன் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கூட்டங்களை ஏற்பாடுகள் செய்து, அந்த அடிப்படையில்தான் ஆய்வு செய்வதாக செய்தி வந்திருக்கிறது. 

இந்த செய்தி அரசுக்கு தெரியுமா? முதல் அமைச்சருக்கு தெரிந்துதான் நடக்கிறதா? அப்படியிருந்தால் ஏற்கனவே முதல் அமைச்சர் விளக்கம் தந்திருக்க வேண்டும். அரசு சார்பில் இருந்து விளக்கம் தந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு இதே ஆளுநர் மாளிகையில் இருந்து ஆய்வு நடத்துவதற்காக செல்லவில்லை என்று ஒரு அறிக்கை வந்தது. ஆனால் இன்றைக்கு தலைமைச் செயலாளர் ஒப்புதலோடு, அவருக்கு தகவல் தெரிவித்துவிட்டுதான் ஆய்வு நடத்துகிறோம். நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று செய்தி வருகிறது. 

இதுபற்றி பேச வேண்டும் என்று கேட்ட நேரத்தில், குறிப்பாக முதல் அமைச்சர் விளக்கம் சொல்ல வேண்டும் என்று கேட்டேன். ஆனால் வாய் மூடி அமைதியாகவே இருந்தார். அவர் அமைதியாகவே இருந்த காரணத்தினால் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். 

இதிலிருந்து என்ன தெரிகிறது என்று சொன்னால் கவர்னருக்கு கட்டுப்பட்டு ஒரு ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. கவர்னருக்கு அடிமையாக, மத்திய அரசுக்கு அடிமையாக, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில், மாநில உரிமைகளையெல்லாம் பறிக்கக்கூடிய நிலையில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இரட்டை ஆட்சி நடக்கிறது. கவர்னர் ஆட்சி. மற்றொன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஒரு அடிமையான ஆட்சி போல நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img