செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

2 வது மனைவி மீது சந்தேகம் -கொலை; குழந்தைகளுடன் கணவன் போலீசில் சரண்
வியாழன் 21 ஜூன் 2018 15:51:16

img
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டி சத்யா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவர் அரசு போக்குவரத்துக்க ழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்து விட்டதால், 3 ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளக்கா பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணப்பிரியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில், மனைவி கல்யாணப்பிரியாவின் நடத்தை மீது சிவமுருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து ள்ளது. இந்நிலையில், இன்று காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவ முருகன், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்யாணப்பிரியா, துடிதுடித்து இறந்தார்.
 
இதையடுத்து, தனது இரண்டு குழந்தைகளுடன் ஆண்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்த சிவமுருகன், நடந்தவற்றை கூறினார். இதை யடுத்து சிவமுருகனின் வீட்டுக்குச் சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் பிணமாகிக் கிடந்த கல்யாணப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரு குழந்தைகளையும், சிவமுருகனின் பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img