img
img

எல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள்’ ஆளுநரிடம் பா.ஜனதா புகார்
வியாழன் 07 ஜூன் 2018 15:33:03

img
அமராவதி,
 
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக மத்திய பா.ஜனதா அரசில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் அரசு நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் தலைவர்கள் பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் ‘எல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள்’  என தெலுங்குதேசத்திற்கு எதிராக பா.ஜனதா புகார் கொடுத்து உள்ளது. 
 
ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற பா.ஜனதா குழு, தெலுங்குதேசம் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக புகாரை கொடுத்து உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக மிகவும் மோசமான மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
 
பா.ஜனதா தலைவர் கண்ணா லட்சுமிநாராயணா பேசுகையில், “எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என அனைவரும் பிரதமர் மோடிக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள். மந்திரி அகிலா பிரியா உள்பட இது போன்ற மோசமான வார்த்தைகளை பிரயோகிக்கும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்,” என கூறி உள்ளார். 
 
ஆந்திராவில் ஜனநாயகமற்ற முறையில் ஆட்சி நடக்கிறது, ஆபத்தான நிலை மாநிலத்தில் ஏற்பட்டு உள்ளது. அரசு அதிகாரிகள் தெலுங்குதேசம் உறுப்பி னர்கள் போன்று செயல்படுகிறார்கள். மாநிலத்தில் போலீஸ் நிலையங்கள் தெலுங்கு தேசம் அலுவலகம் ஆகிவிட்டது எனவும் விமர்சனம் செய்து உள்ளார். ஆந்திராவில் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img