செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

கர்நாடகாவில் மதசார்பற்ற அரசை அமைக்க வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் - டிகே சிவகுமார்
புதன் 16 மே 2018 15:54:42

img
பெங்களூரு, 
 
சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.
 
தோல்வியை நோக்கி சென்ற நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அவசர அவசரமாக அறிவித்தது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், முதல்–மந்திரி பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளது.
 
அதேநேரத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இருதரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளது. இவ்விவகாரத்தில் ஆளுநர்தான் இறுதிமுடிவு எடுக்கவேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் குற்றம் சாட்டி வருகிறது. பெங்களூருவில் இன்று பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கலந்துக்கொள்ளவில்லை, அவர்கள் மாயமானார்கள் என்பது மறுக்கப்பட்டு உள்ளது.
 
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டிகே சிவகுமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி கேட்கப்படுவதாக வும் தகவல்கள் வெளியாகியது.
 
இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினார்கள். சிவகுமார் பேசுகையில், “நான் துணை முதல்-மந்திரி ஆக வேண்டும் என்பது தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பாக எந்தஒரு கேள்வியும் கிடையாது. எங்களுடைய முக்கியத்துவம் எல்லாம் மாநிலத்தில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே. எங்களுடைய 78 எம்.எல்.ஏ.க்களும் எங்களுடனே உள்ளார்கள்,” என்றார். டிகே சிவகுமார் கடந்த ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றபோது, பாஜகவிடம் இருந்து குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதனையடுத்து அவருடைய வீடுகளில் வருமான வரித்துறை திடீர் சோதனையை மேற்கொண்டது, சொகுசு விடுதி, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img