img
img

ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா? சந்தேகம் எழுப்பும் மம்தா பானர்ஜி
சனி 12 மே 2018 18:02:28

img
கொல்கத்தா,
 
காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் சூழல் தற்போது நாட்டில் நிலவவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி யுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் பதவி ஏற்க தயாராக உள்ளதாக  ராகுல் காந்தி தெரிவித்தார்.
 
இது தொடர்பாக  மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:- “ தனது கருத்தை சொல்ல ராகுல் காந்திக்கு உரிமை உள்ளது. ஆனால், உண்மையில், காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. 
 
பல மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ளன. அவை ஒன்றாக சேர்ந்து ஒரு அணியை அமைத்தால், அது நாட்டிற்கு நல்லதாக இருக்கும். அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாட்டின் நலனுக்கு எது தேவையோ அதனை செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 
மூன்றாவது அணிக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா? என்று மம்தா பானர்ஜியிடம் கேள்வி எழுப்பியபோது, தெளிவாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img