img
img

பயங்கரவாத தாக்குதல்: சோனியாவைச் சந்தித்து சுஷ்மா விளக்கம்
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:48:23

img

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய தாக்குதல் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் சந்தித்து விளக்கமளித்தார். வாராணசியில் கடந்த மாதம் 2-ஆம் தேதி நடந்த கூட்டத்தின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சோனியா காந்தி டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், அவரை நேரில் சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார். சுஷ்மாவைத் தவிர, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியை நேற்று நேரில் சந்தித்து உரையாடினார். இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் பயங்கரவாத நிலைகள் மீது துல்லியமான தாக்குதல் நிகழ்த்தியுள்ளதன் மூலம், பாகிஸ்தானுக்கு ஆணித்தரமான செதி அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் எல்லை தாண்டிய தாக்குல்கள் நடைபெறுவதற்கு பாகிஸ்தானே பொறுப்பு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img