img
img

திருமண விழாவில் மற்றொரு 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
செவ்வாய் 17 ஏப்ரல் 2018 13:29:01

img
லக்னோ
 
காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது  சிறுமி ஒருவர் 8  பேரால் பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கி றார்கள். இது குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
தொடர்ந்து உன்னவோ சம்பவம் அரியானா போன்ற இடங்களிலும் இது போல் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சம்பவங்கள் நடந்து நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன. இந்த நிலையில்  இது போல் மற்றொரு பயங்கர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்து உள்ளது. உத்தரபிரதேசம் எடா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
 
அங்கு நடந்த ஒரு திருமண விழாவில் தனது பெற்றோர்களுடன் சிறுமி கலந்து கொண்டார். அப்போது 18 வயது  இளைஞர் சோனு என்பவர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உள்ளார். சிறுமியின் உடல் அருகே  குற்றவாளி குடிபோதையில் படுத்து இருந்தான்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனுவை கைது செய்து உள்ளனர்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img