அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக எதிர்க்கட்சிகளின் ஆதரவை மேலும் அதிகரிக்க, சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி.
வட மாநிலங்களில் பா.ஜ.க-வின் கை மேலோங்கியிருப்பதால், அதை மாற்றியமைக்க மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி யின் தலைவருமான மம்தா பானர்ஜி, மிகத் தீவிரமான முயற்சியில் ஈடுப்பட்டுவருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்துவதையே இவர் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளார். இதனால், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான கட்சியாக மாற இவர் பல பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சிக்கும், அவர்கள் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கொண்டுவர இருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கும் மம்தா ஆதரவு அளித்தார். பின்னர், டெல்லி சென்ற மம்தா அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தி.மு.க எம்.பி., கனிமொழி, சிவசேனா கட்சியின் எம்.பி., சஞ்சய் ராவத் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, பா.ஜ.க-வின் அதிருப்தி தலைவர்களைச் சந்தித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக, இரண்டு நாள் பயணமாக சென்னை வரவுள்ளார் மம்தா பானர்ஜி. ஏப்ரல் மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் வர இருக்கி றார். சென்னை வரும் இவர், தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார். மேலும் தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலி னுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்