சென்னை: பாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இன்றைய தினம் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் சிறிய கதையை சொல்லினார். அந்த கதையின் சாராம்சம் என்னவென்றால், பாஜகவுடன் நட்பாக உள்ள அதிமுக அரசால் காவிரி விவகாரத்தில் தீர்வு காண முடியவில்லை என்றார்.
திமுக உறுப்பினரின் இந்த கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் திமுக உறுப்பினர் கூறிய கதை திமுகவுக்குத்தான் பொருந்தும். காவிரி விவகாரத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியும் இல்லை ஆதரவும் இல்லை. அப்படி இல்லாத நிலையிலும் காவிரிக்காக அதிமுக நடவடிக்கை களை எடுத்துக் கொண்டுதான் வருகிறது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தபோதிலும் காவிரி தொடர்பாக நடவடிக்கை எடுத்ததில்லை என்றார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் எடப்பாடி தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுடன் நட்புடன் இருந்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்தது. தமிழகத்தில் பாஜக செயல்படுத்தும் திட்டங்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக பாஜகவை அதிமுக ஆதரித்து வருவதாகவும் புகார் நிலவுகிறது. இந்நிலையில் முதல்வர் பேரவையில் பாஜகவுடன் கூட்டணியும் இல்லை ஆதரவும் இல்லை என்ற கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்