img
img

இந்த ஆண்டும் ஏராளமான அனிதாக்கள் உருவாக வழிவகுக்கும்'- அன்புமணி
செவ்வாய் 23 ஜனவரி 2018 14:07:15

img

மாணவர்களால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்குத்தான் தயாராக முடியுமே தவிர, நீட் தேர்வுக்கான பயிற்சியில் கவனம்செலுத்த முடியாது' என்று கூறியுள்ள பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, 'நீட் தேர்வுக்காக தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுவரும் பயிற்சியும் பயனுள்ளதாக இல்லை' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

2018-19-ம் ஆண்டு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள், மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அத்தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு  பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கப்போவதாக அறிவித்து, அதை அரைகுறையாகத் தொடங்கியிருப்பதன்மூலம், தமிழகத்திலுள்ள அனைத்து மாணவர்களும் நீட் தேர்வை எழுதித்தான் தீர வேண்டும் என்ற நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசின் கால்களில் மண்டியிட்டுக்கிடக்கும் பினாமி ஆட்சியாளர்களால், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வலியுறுத்தி, ஓரா ண்டுக்கு முன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியாதது வெட்கக்கேடானது. இது, தமிழ கத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறத் தவறிவிட்ட ஆட்சியாளர்கள், நீட் தேர்வுக்கான பயிற்சியையாவது மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் வழங்குகிறார்களா என்றால், அதுவும் இல்லை. நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடப்புக் கல்வியாண்டின் தொடக்கத்தில் அறிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் மாதத்துக்குள் தமிழ்நாட்டில்  உள்ள 412 ஒன்றியங்களிலும் தலா ஒரு நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால், அறிவித்தவாறு எதையும் செய்யாத தமிழக அரசு, நவம்பர் 13-ம் தேதிதான் இத்திட்டத்தைத் தொடங்கியது. அதுவும் அனைத்து ஒன்றியங்க ளிலும் பயிற்சி மையங்களைத் திறக்காத அரசு, முதலில் 100 ஒன்றியங்களில் மட்டும் நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கியது. மீதமுள்ள ஒன்றி யங்களில் ஜனவரி மாதத்துக்குள் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். ஆனால், ஜனவரி முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், முதலில் தொடங்கப்பட்ட 100 மையங்களைத் தவிர ஒரு மையம்கூட புதிதாக திறக்கப்படவில்லை. நீட் தேர்வு க்கு உத்தேசமாக இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன.

அதிலும் மார்ச் மாதம் முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வுகளை  எழுதுவதற்குப் போய்விடும். அவ்வாறு இருக்கும்போது நீட் தேர்வுக்கான பயிற்சியை முன்கூட்டியே தொடங்கியிருந்தால்தான் மாணவர்கள் பயிற்சிபெற்று நீட் தேர்வுக்கு முழுமையாகத் தயாராக முடியும். ஆனால், 312 ஒன்றியங்களில் பயிற்சி மையங்கள் இன்னும் திறக்கப்படாததால், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எவ்வாறு இருக்கும் என்ற புரிதல்கூட இன்னும் ஏற்படவில்லை.

நீட் தேர்வுக்காக தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுவரும் பயிற்சியும் பயனுள்ளதாக இல்லை. கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு ஆசிரியர் நேரடி யாகப் பாடம் நடத்துவதாகும். ஆனால், அரசின் இலவச நீட் தேர்வுப் பயிற்சி அப்படிப்பட்டதல்ல. இது, வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடத்தப்ப டும் பயிற்சி ஆகும். வகுப்பறை போன்ற கட்டமைப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினால்தான் மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அப்போ துதான், மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபெற முடியும். வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் இது சாத்தியமில்லை.  இந்த முறையில், மாணவர்கள் ஆசிரியருடன் உரையாட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட 412 மையங்களின் மாணவ, மாணவியரும் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற முடியாது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து, அதை செய்யாமல் ஏமாற்றியது, அனைத்து ஒன்றியங்களிலும் நீட் பயிற்சி மையங்களை அமைப்பதாக அறிவித்து, அதை இன்னும்  செயல்படுத்தாதது, நேரடியாக பயிற்சி அளிப்பதற்குப் பதிலாக வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் பயிற்சி அளிப்பது என மாணவர்களுக்கு அடுத்தடுத்து பினாமி தமிழக அரசு துரோகம் செய்துவருகிறது. வசதி படைத்த மாணவர்கள், குறைந்தது இரு ஆண்டுகள் நீட் தேர்வுக்கு பயிற்சிபெறுகிறார்கள். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இரு மாதங்கள்கூட பயிற்சி கிடைக்காத நிலையில், அவர்க ளால் நீட் தேர்வில் எவ்வாறு தேர்ச்சிபெற முடியும்?

தமிழகத்தில் மீதமுள்ள 312 ஒன்றியங்களில் உடனடியாக  நீட் பயிற்சி தொடங்கப்பட்டால்கூட, மாணவர்களால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்குத்தான் தயாராக முடியுமே தவிர, நீட் தேர்வுக்கான பயிற்சியில் கவனம்செலுத்த முடியாது. இவ்வாறாக, தமிழக அரசு அதன் பொறுப்பற்ற செயல்பாடுகளால் அர சுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக்கல்விக் கனவை சிதைத்து சின்னாப்பின்னமாக்கியுள்ளது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஏராளமான அனிதாக்கள் உருவாவதற்கே தமிழக அரசின் நடவடிக்கைகள் வழிவகுக்கும். இந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக, ஆசிரியர்கள் நேரடியாகப் பயிற்சி யளிக்கும் மையங்களை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். அதுதான், அதன் துரோகங்களுக்கு நல்ல பரிகாரமாக அமையும்" என்று கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img