img
img

ஜெயலலிதா சிகிச்சை குறித்து பொய் அறிக்கை.
ஞாயிறு 17 டிசம்பர் 2017 10:32:35

img

சென்னை,

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி அப் போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் முன்னதாக செப்டம்பர் 22-ஆம் தேதி அப்போ லோவில் அனுமதிக்கப் பட்டார். அப்போது அவருக்கு சாதாரண காய்ச்சல் தான், அவர் விரைவில் வீடு திரும் புவார் என அப்போலோ சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டது. ஆனால் தற்போது அதன் தலைவர் பிரதாப் ரெட்டி அந்த அறிக்கை பொய் எனவும் உண் மையை மறைத்து வெளி யிடப்பட்ட அறிக்கை எனவும் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு தான் என கூறினார்கள். மேலும் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். அவர் எப்போது வீட்டுக்கு செல்லலாம் என விரும்புகிறாரோ அப்போது அவர் செல்லலாம் என பேசி வந்தார் அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி. ஆனால் ஜெயலலிதா கடைசி வரை வீடு திரும்பாமல் மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

இதனையடுத்து அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விசாரணை ஆணையத்திடம் இருந்து அப்போலோ மருத்துவர்களுக்கு, விசாரணைக்கு ஆஜராக சம்மன் வந்துள்ளதாகவும் தனக்கு வரவில்லை எனவும் கூறியுள்ளார் பிரதாப் ரெட்டி.

 ஜெயலலிதா ஆபத்தான நிலையில் தான் மருத்துவமனைக்கு வந்ததாக கூறிய பிரதாப் ரெட்டி தற்போது விசாரணை நடந்து வருவதால் வேறு எதுவும் கூற இயலாது என கூறினார். மேலும் மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று அறிக்கை அளிக்கப்பட்டது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது என்பதாலேயே உண்மையை மறைத்து அறிக்கை வெளியிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார் பிரதாப் ரெட்டி.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img