img
img

4-வது நாளாக இருட்டில் தவிக்கும் குமரிமாவட்டம்; விரைவில் சீரமைக்கப்படும்
சனி 02 டிசம்பர் 2017 17:51:03

img
சென்னை
 
கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஒகி புயலால்ஆயிரம் மின்கம்பங்களும், 100க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக 1,500 மீட்டர் உயர் மின் அழுத்த பாதையும், 2,400 மீட்டர் குறைந்த மின் அழுத்த பாதையும் சேதம் அடைந்துள்ளது. மின்கம்பங்களை மாற்றி, மின்பாதையை சீரமைக்க வெளி மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். நேற்று முதல் அவர்கள் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பிற நகரங்களில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
இன்று 4-வது நாள் ஆன பின்பும் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் மின் விநியோகம் முழுமையாக சீரடையவில்லை. எங்குமே மின் விநியோகம் நடக்கவில்லை. இதனால் 29-ந்தேதி இருளில் மூழ்கிய குமரி மாவட்டம் இன்று 4-வது நாளாக இருட்டில் தவிக்கிறது. மின்சார தட்டுப்பாடால் மாவட்டத்தில் எங்குமே குடிநீர் விநியோகம் நடை பெறவில்லை. மோட்டார் இயங்கினால் மட்டுமே தண்ணீர் சப்ளை செய்ய முடியும் என்று குடிநீர் வாரிய ஊழியர்கள் கூறுகிறார்கள். பல இடங்களில் மக்கள் மொட்டை மாடியில் இருந்து விழும் மழை நீரை சேமித்து வீட்டு தேவைகளுக்கு பயன்ப டுத்துகிறார்கள்.   ஆனால்  குடிக்க தண்ணீரின்றி தவிக்கிறார்கள். 
 
ஏ.டி.எம். மையங்களும் இயங்கவில்லை. வெளி இடங்களில் இருந்து உதவிக்கு வாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்பதற்கு கூட செல்போன்கள் பயன்படவில்லை. அவையும் மின்சாரம் இல்லாததால் செயல்படவில்லை. குமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மாவட்டத்தில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.
 
அவர்களிடம் மாவட்டத்தில் மின் விநியோகத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் மின்விநியோகம் சீராகுமென்று அமைச்சர்கள் கூறி உள்ளனர்.இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனூரில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், சேலம் மாநகரில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாலங்கள் அனைத்து விரைவில் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார். அத்துடன் கன்னியாகுமரியில் மின்கம்பங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரையில் அங்கு மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img