img
img

ஆர்.கே.நகரைக் கை கழுவுகிறாரா தினகரன்?! - கலக்கம், குழப்பம்
செவ்வாய் 28 நவம்பர் 2017 14:12:06

img

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. 'குடும்ப உறவுகளின் எதிர்ப்பை அடுத்து, போட்டியிடுவதுகுறித்து ஆலோசித்து வருகிறார் தினகரன். அவருக்குப் பதிலாக கட்சி நிர்வாகிகளில் ஒருவரைப் போட்டியிட வைக்கும் வேலைகள் நடந்துவருகின்றன' என்கின்றனர் சசிகலா உறவுகள். 

 
பரப்பன அக்ரஹாரா சிறையில் தன்னை சந்திக்க வந்த குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய சசிகலா, ' களத்தில் நாம் இரட்டை இலையை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது நமக்குத்தான் ஆபத்தாக முடியும். இத்தனை ஆண்டுகாலம் எதற்காக நாம் பாடுபட்டோமோ, அதற்கு எதிராக நிற்பது சரியல்ல. தினகரன் களத்தில் நிற்பதையும் சிலர் விரும்பவில்லை. இதுவரையில் மிடாஸில் இருந்து மதுபானத்தைக் கொள்முதல் செய்த டாஸ்மாக் நிறுவனம், உடனடியாக நிறுத்திக்கொண்டது.
 
இதேபோல், குடும்பத்தினர் நடத்தும் பிற தொழில்களுக்கும் சிக்கல் வரலாம். உள்ளாட்சித் தேர்தல் என்றால் களத்தில் போட்டியிட்டு பலத்தைக் காட்டலாம். இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றுவிட்டால், நமக்குத்தான் நஷ்டம். குடும்பத்துக்கு மூத்தவர்களிடம் கலந்து ஆலோசித்து முடி வெடுங்கள்' எனப் பேசியதாகவும் குடும்ப உறவுகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் ஆதரவாளர் ஒருவரைக் களமிறக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. "வடசென்னைப் பகு தியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரை களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர்" என விவரித்த சசிகலா உறவினர் ஒருவர், "இடைத்தேர்தலில் மீண்டும் தினகரன் களமிறங்கலாம் என்பதை உணர்ந்துதான், வருமான வரித்துறை சோதனை தீவிரமடைந்தது.

சசிகலா உறவுகளிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை வைத்தே வளையத்தை இறுக்கும் முடிவில் இருக்கிறது வருமான வரித்துறை. இதை சசிகலாவின் கவனத்துக்கும் சிலர் கொண்டு சென்றுள்ளனர். 'களத்தில் இருந்து தினகரன் விலகியாக வேண்டும்' என்பதில் மத்தியில் உள்ளவர்கள் உறுதியாக உள்ள னர். எனவே, 'போட்டியிட வேண்டாம்' எனத் தகவல் சொல்லி அனுப்பினார் சசிகலா. அவரது வார்த்தைகளுக்கு தினகரன் செவிமடுப்பாரா என்பதெல்லாம் போகப் போகத் தெரியும்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img