img
img

மோடியின் கையை வெட்டவும், கழுத்தை அறுக்கவும் பீகார் மக்கள் தயாராக உள்ளனர்
புதன் 22 நவம்பர் 2017 16:14:14

img
பாட்னா
 
பீகாரின் உஜியார்பூர் தொகுதி எம்.பி., நித்யானந்த் ராய், பிரதமர் மோடியை நோக்கி நீட்டப்படும் விரல்களை வெட்டுவோம் எனக்கூறி சர்ச்சையை ஏற்ப டுத்தினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டார். 
 
பாட்னாவில் நடந்த கூட்டம் ஒன்றில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி பேசுகை யில், மோடியை குற்றஞ்சாட்டுபவர்களின் விரல்களை வெட்டுவோம் என பா.ஜ.,வினர் கூறுகின்றனர். செய்து பாருங்கள். நாட்டு மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். பீகார் மக்களும் அமைதியாக இருப்பார்களா? 
 
இங்குள்ள பலர் பிரதமர் மோடியின் கழுத்தை அறுக்கவும், கையை வெட்டவும் தயாராக உள்ளனர். இதற்காக சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளனர். அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,வருமான வரித்துறை விசாரணை எதுவாக இருந்தாலும், அவர்களை பற்றி எனக்கு தெரியும். நாங்கள் என்ன தவறு செய்தோம். இதற்கு மத்திய மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும். இதற்காக அவர்கள் சம்மன் அனுப்பட்டும்.
 
என்னிடம் அவர்கள் விசாரணை நடத்த வேண்டுமென்றால், அவர்கள் பாட்னா வந்துதான் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ராப்ரி தேவியின் இந்த பேச்சுக்கு பாரதீய ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img