img
img

தேசியக்கொடிக்கு மேல் பறந்த பாரதிய ஜனதா கொடி!
திங்கள் 20 நவம்பர் 2017 16:05:52

img

உத்தரப்பிரதேசத்தில் யோகி பங்கேற்ற பேரணியில், தேசியக் கொடிக்கு மேல் பாரதிய ஜனதா கொடி பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாரதிய ஜனதா கட்சி, காசியாபாத் ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. அதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். யோகி வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன், அந்தக் கட்டடத்தின் உச்சியில் தேசியக்கொடிக்கு மேல் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பறந்துகொண்டிருந்தது.

 அதைப் பார்த்த பத்திரிகையாளர்களும் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். தேசியக்கொடி மரியாதைச் சட்டத்தின்படி, தேசியக்கொடிக்கு மேலாக எந்தக் கொடியும் பறக்கக்கூடாது. பக்கவாட்டில்கூட கொடி பறக்கக்கூடாது. அதிகாரிகள் அறிவுறுத்தியதையடுத்து, அவசரம் அவசரமாக பாரதிய ஜனதா கட்சியின் கொடியை இறக்கவைத்தனர். எனினும், தேசியக் கொடிக்கு மேல் பாரதிய ஜனதா கொடி பறப்பதை சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸில் எந்தப் புகாரும் செய்யப்படவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசப்பற்றுகுறித்துப் பேசும் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களே... தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளலாமா  என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img