img
img

இதற்கு முன்னால் நடந்த வருமான வரித்துறை சோதனைகளின் முடிவு என்ன? : மு.க.ஸ்டாலின் ஆவேசம்
வியாழன் 09 நவம்பர் 2017 16:33:36

img

தமிழகம் முழுதும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர் இல்லத்தில் நடக்கும் வருமான வரித்துறை சோதனை பற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் இதற்கு முன்னர் நடந்த வருமான வரித்துறை சோதனைகளை பட்டியலிட்டு அதன் முடிவு என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்பினார்.

தமிழகம் முழுதும் இன்று காலை முதல் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்கள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். ஜெயா தொலைக்காட்சி, மிடாஸ், ஜாஸ் சினிமாஸ் போன்ற இடங்களிலும் சோதனை நடக்கிறது.

பட்டியலிட்ட ஸ்டாலின்:

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:

இந்த சோதனையை எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது, எழுதி வைத்துதான் படிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் கரூர் அன்பு நாதனிடம் கைப்பற்றிய பணம் என்ன ஆனது. திருப்பூரில் சிக்கிய ரூ.570 கோடி என்ன நிலையில் உள்ளது, நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, சைதை துரைசாமி, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடுமட்டுமல்ல, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், மகன் வீட்டில் நடந்த சோதனை, மணல் மாஃபியா சேகர் ரெட்டியிடம் நடந்த சோதனை, குட்கா புகழ் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை, ஆர்.கே.நகர் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட சோதனை ரூ.89 கோடி பரிமாற்றத்துக்கான ஆவணம், முதலமைச்சர் எடப்பாடிக்கு நெருக்கமான ஈரோடு ராமலிங்கத்திடம் நடத்தப்பட்ட சோதனை, குட்கா புகழ் விஜயபாஸ்கரின் கூட்டாளி சுப்ரமணியத்திடம் நடத்தப்பட்ட சோதனை, தற்போது காவல் உயர் அதிகாரி டிஜிபி டி.கே.ராஜேந்திரன், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட குட்கா வியாபாரிகளிடம் நடந்த சோதனை, சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடத்தப்பட்ட ரெய்டு என்ன ஆனது, எந்த பதிலும் இல்லை.

இந்த ரெய்டுகள் எல்லாம் என்ன ஆனது, எதன் அடிப்படையில் நடந்தது. என்ன முடிவு, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கெல்லாம் பதில் இல்லை, அந்த அடிப்படையில் தான் இந்த ரெய்டும் நடந்துள்ளது. தொடர்ந்து இதே போன்ற நிலைதான் உள்ளது.

இது பற்றி உங்கள் பதில்?

என் பதில் என்ன வென்றால் நான் மேற்சொன்ன விஷயங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பதிலை பெற்று வாருங்கள் என் பதிலை நான் சொல்கிறேன்.

பெரிய பட்டியலே இருக்கிறது. என்ன நோக்கம் என்ன நடவடிக்கை எந்த பதிலும் இல்லை.

இதற்கு பின்னால் அரசியல் இருக்கிறதா? அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை உள்ளதா?

அரசியல் காரணம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள் சொல்லுங்கள், அப்புறம் என்னுடைய பதிலை நான் சொல்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img