சென்னை: சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் எம்.ஆர்.சி நகரில் நடைபெற திருமண விழாவில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிவிலால் புரோகித்தும் சென்றார். மேலும் மத்திய பாதுகாப்பு படை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சென்றார். கோபாலபுரம் வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
மேலும் துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மோடியை வரவேற்றனர். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி சுமார் 15 நிமிடம் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் முதல்முறையாக சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்