செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

காவிரி விவகாரத்தில் தனக்குள்ள பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது
வியாழன் 03 ஆகஸ்ட் 2017 15:56:56

img

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் மத்திய அரசிடம் அதிரடி யாக பல கேள்விகளைக் கேட்டனர். 'காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதற்கு பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இந்த வழக்கு, தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. இதனால், தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று வாதாடினார். அதன்பின்னர், உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம், "காவிரி விவகாரத்தில் தனக்குள்ள பொறுப்பை மத்திய அரசு தட்டிகழிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாகக் கூறிவிட்டு, பின்னர் பின்வாங்கியது ஏன்? " என்று கடுமையான கேள்விகளை முன்வைத்தது. மத்திய அரசு விரை வில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img