செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறாரோ? ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம்
வியாழன் 03 ஆகஸ்ட் 2017 15:28:03

img

சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து ஒதுக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுகிறாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த டி.டி.வி.தினகரன், டெல்லி சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கட்சிப்பணியை தொடங்கப் போவதாக அறிவித்தது எடப்பாடி பழனிசாமி அணியை அதிரவைத்தது. இந்தநிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சி யின் தலைமை அலுவலகத்துக்கு செல்ல இருப்பதாக கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார் தினகரன். இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதன் பின் னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கட்சியையும் ஆட்சியையும் முதல்வர் பழனிசாமிதான் வழிநடத்துவார் என்று அதிரடியாக அறி வித்தார். இந்த பரபரப்புக்கு இடையே பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் பேச்சுவார்த்தையில் பழனிசாமி அணியினர் ஈடுபட்டு வருகின்றனர். பன்னீர் செல்வத்துக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்க பழனிசாமி அணியினர் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், கோவை வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், எடப்பாடி- டி.டி.வி.தினகரன் இடையேயான மோதலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து ஒதுக்கி விட்டதாக எடப்பாடி நாடகம் ஆடுகிறாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி விட்டதாக கூறுவதின் உண்மைத்தன்மை குறித்து எடப்பாடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img