img
img

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி... நெய்வேலியில் பதற்றம்!
திங்கள் 31 ஜூலை 2017 16:13:37

img

வடலூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள்மீது போலீஸ் தடியடி நடத்தியதால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள், தாங்கள் ஏற்கெனவே செய்துவந்த மாதம் 26 நாட்கள் வேலையை 19 நாட்களாக குறைத்துள்ளது என்.எல்.சி. நிர்வாகம். இதைக் கண்டித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 12-ம் தேதியிலிருந்து வேலை நிருத்தம் செய்து, பலகட்டப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இதற்கு, அனைத்துத் தொழிற்சங்கங்களும் தி.மு.க., பா.ம.க., த.வா.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவருகிறார்கள். இன்று 20-வது நாளை எட்டிய இந்தப் போராட்டம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் மனைவி, குழந்தைகள் என குடும்பத்தோடு வந்து, வடலூர் நான்குமுனை சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை களைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர். அதற்கு அவர்கள், கோரிக்கை நிறைவேறும் வரை இங்கிருந்து களைந்துசெல்ல மாட்டோம் என்றனர். இதனால், போலீஸாருக்கும் ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த போலிஸார், திடீரென்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலருக்கு மண்டை உடைந்தன. கை, கால்களில் அடிபட்டு சிதறி ஓடினார்கள். இதனால், அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img