img
img

கதிராமங்கலம் தொடர்பாக கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
திங்கள் 31 ஜூலை 2017 15:29:52

img

கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, மக்கள் கடும் அச்சமடைந்தது குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதுகுறித்தும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுத்துபூர்வமாகப் பதில் தந்திருக்கிறார். அதில், 'மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சேர்ந்து, எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட கசி வுகள் குறித்து 30 ஜூன் 2017-ம் தேதி அன்று ஆய்வுசெய்தார்கள். அந்த ஆய்வின்போது, 1,000 சதுர அடி பரப்பளவில், ஒரு அடி ஆழத்துக்கு எண்ணெய்க் கசிவினால் மண் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். பாதிப்புக்கு உள்ளான மண் முழுமையாக அகற்றப்பட்டு, அருகில் உள்ள ஓ.என்.ஜி.சி குத்தாலம் எரிவாயு மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பாதிப்புக்கு உள்ளான நிலத்திலிருந்து மண் முழுமையாக அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய மண்ணை விவசாயத்துக்கு ஏற்ற வகையில் நிரப்பவும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img