img
img

காவிரி விவகாரம்..! தொடரும் வன்முறைகள்!
புதன் 14 செப்டம்பர் 2016 13:49:41

img

காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. தற்போது, இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் தமிழக இளைஞர் ஒருவர் கன்னட அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்நிலையில் பதிலுக்கு இராமேஸ்வரத்தில் கன்னட பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார். இதன் உச்சகட்டமாக பெங்களூருவில் நேற்று தமிழகத்துக்கு சொந்தமான தனியார் பேருந்துகள் 50க்கு மேற்பட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதேவேளை வன்முறை பரவாமல் இருக்க தமிழக- கர்நாடக எல்லையில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும். கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ளார். பொறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு இருமாநில மக்களும் செயல்பட வேண்டும் என்றும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், நாட்டின் நலனே முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img