img
img

டி.ஐ.ஜி. ரூபாவை பணி இடமாற்றம் செய்ய பரிந்துரை; தகவல் கொடுத்த கைதிக்கு அடி-உதை
ஞாயிறு 16 ஜூலை 2017 14:13:39

img

பெங்களூரு, பெங்களூரு சிறையில் மோசடிகளை வெளிப்படுத்திய அதிகாரி ரூபாவை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவின் அறிக்கை மூலம் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையின் முறைகேடுகள் பற்றி செய்திகள் தொடர்ந்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், சிறையில் உள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி தனி சமையலறை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், முத்திரைத்தாள் மோசடியில் கைதான தெல்கிக்கும் சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.ரூபா குற்றம்சாட்டி உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ், மற்றும் பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோர் மறுத் துள்ளனர். இந்த நிலையில், சிறைத்துறை நிர்வாகம் மீதும், அதிகாரிகள் மீதும் ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டி வரும் டி.ஐ.ஜி. ரூபாவை பணி இட மாற்றம் செய்ய வேண்டும் என்று சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் மாநில அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைதிக்கு அடி-உதை இது மாநில அரசுக்கும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சிறை முறை கேடுகள் குறித்து ரூபாவுக்கு தகவல் கொடுத்த கைதி யார்? என்பது குறித்து அதிகாரிகள் சிறையில் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச் சியாக ரூபாவுக்கு சிறை முறைகேடுகள் பற்றிய தகவல்களை கொடுத்ததாக கூறி ராமமூர்த்தி என்ற கைதியை சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆபாச மாகவும், அவதூறாகவும் திட்டியதோடு, அவரை அடித்து உதைத்ததாக அந்த கைதியின் மனைவி அனிதா போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img