img
img

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!
சனி 08 ஜூலை 2017 14:22:03

img

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகி யுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பூஞ்ச் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று காலை நடந்தேறிய இந்தத் திடீர் தாக்குதலால், கணவன்-மனைவி இருவரும் பலியாகினர். அந்தத் தம்பதியினரின் இரண்டு குழந்தைகளும் காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தத் தாக்குதலில், இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, நேற்று காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் மீதும் அவர்கள் வாகனங்கள் மீதும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால், தற்போது எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img