img
img

இலங்கை சென்று திரும்பிய தமிழிசை முக்கியத் தகவல்!
வெள்ளி 07 ஜூலை 2017 16:29:41

img

இலங்கை சென்று தமிழகம் திரும்பிய மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைதுசெய்துவருகின்றனர். பின்னர் மீனவர்கள் விடு விக்கப்படுவதும், படகுகளைச் சிறைபிடிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இலங்கைக் கடற்படையினரால் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க, படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். சமீபத்தில்கூட பத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப் பட் டனர். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இலங்கை சென்று வந்துள்ளார். இந்தப் பயணம்குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் பயணத்தின்போது, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகேவைச் சந்தித்து, தமிழக மீனவர் பிரச்னைகளை எடுத்துரைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைக் கனிவுடன் பரிசீலித்து, 'பிடிபட்ட படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்' என்ற நல்ல செய்தியைத் தமிழக மீனவ சகோதரர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன்மூலம், ஏற்கெனவே பிடிபட்ட சுமார் 120 படகுகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img