img
img

மனைவி புகார் எதிரொலி... பாலாஜி மீது போலீஸ் வழக்குப்பதிவு!
செவ்வாய் 04 ஜூலை 2017 18:52:45

img

விஜய் டிவி தொகுப்பாளர் பாலாஜி மீது அவர் மனைவி நித்யா சில நாள்களுக்கு முன்பு மாதவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில் அவர், என் கணவர் பாலாஜி சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது தொடர்பாக மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு எதுவும் செய்யாமல் இருந்தது. இதனால் மனமுடைந்த நித்யா இது தொடர்பாக கடந்த ஜூன் 1-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் அவர், ’மாதவரம் போலீஸார் எனது வழக்கைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள்’ என்று புகார் கூறி மனு ஒன்றை கமி ஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய மாதவரம் போலீஸார் நடிகர் பாலாஜி மீது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாசமாகப் பேசி கொடுமைப்படுத்தியது, பெண்கள் வன்கொடுமை சட்டம், சாதி ரீதியாக அவரை இழிவுபடுத்திப் பேசியதாக sc/st act உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து பாலாஜியை விரைவில் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img