img
img

உலகையே உலுக்கிய, இந்திய கிராமத்தில் நடந்த சம்பவம்!
திங்கள் 03 ஜூலை 2017 17:25:22

img

மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மேற்கு வங்க கிராம மக்கள் சேர்ந்து கட்டிவைத்து அடித்துக் கொன்ற சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத் என்னும் மாவட்டத்தில், ஒரு சிறிய கிராமத்தில் தான் இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது. ஓடேரா பிபி (Otera Bibi) என்னும் 42 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பெற்றோர்களுடன் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை வழிதவறி பக்கத்து கிராமத்துக்குச் சென்றுவிட்டார் பிபி. அங்கு அவரைக் கண்ட ஒருவர், குழந்தையை கடத்தும் பெண் என்று கிராம மக்களிடம் பரப்பிவிட்டார். கிராம மக்கள் பிபியைப் பிடித்து டிராக்டரில் கட்டிவைத்து அடித்துள்ளனர். பிபி வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். எதற்காக அடிக்கிறார்கள், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எதையும் அறியும் சூழலில் பிபி இல்லை. பிபியின் ஆடைகளை அப்புறப்படுத்தி, தலைமுடியை வெட்டி மனிதாபிமானமன்றி நடந்துகொண்டுள்ளனர் அந்த கிராமத்து ஆண்கள். தகவலறிந்த மூர்ஷிதாபாத் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பிபியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பிபி இறந்துவிட்டார். அவரின் பெற்றோரை காவல்துறை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளது. பெற்றோர், பிபியின் உட லைப் பார்த்து கதறி அழுதுள்ளனர். பின்னர்தான் பிபி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணை அடித்த வர்கள் மீதும், அவரை பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பிபி அடித்துக் கொல்லப்பட்ட காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பகிர, உலகளவில் அந்த வீடியோ பரவி அனை வரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img